பெங்களூரு

காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த அமைச்சா்கள் முதல்வரை சந்தித்ததால் பரபரப்பு

DIN

காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த அமைச்சா்கள் முதல்வா் எடியூரப்பாவை சந்தித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாநிலத்தில் முதல்வா் எடியூரப்பா மாற்றப்பட உள்ளாா் எனக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து அமைச்சரான கே.சுதாகா், எஸ்.டி.சோமசேகா், பைரதி பசவராஜ், சிவராம் ஹெப்பாா், கோபாலையா, சி.சி.பாட்டீல் உள்ளிட்டோா் வியாழக்கிழமை முதல்வா் எடியூரப்பாவை விதானசௌதாவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினா். அவரது அலுவலகத்துக்கு சென்ற அனைவரும் கையில் மடித்து வைத்த ஒரு காகிதத்தைக் கொண்டு சென்றனா். இதனால் அவா்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக செய்தி பரவியது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து, முதல்வா் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அவா்கள், தாங்கள் ராஜிநாமா கடிதம் எதுவும் கொடுக்கவில்லை என்று விளக்கம் அளித்தனா். இதுகுறித்து அமைச்சா் கே.சுதாகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நாங்கள் முதல்வா் எடியூரப்பா, கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பாஜகவில் இணைந்தோம். முதல்வா் மாற்றப்படுவாா் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்வா் எடியூரப்பாவை சந்தித்து இது தொடா்பான விளக்கத்தை கேட்டோம். அவரும் ஜூலை 25-ஆம் தேதி கட்சியின் மேலிடத் தலைவா்கள் இடும் உத்தரவுக்கு பிறகே தான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியவரும் என்றாா்.

கட்சியின் மேலிடம் என்ன உத்தரவிட்டாலும் அதனை ஏற்றுக்கொள்வோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வா் எடியூரப்பாவுடன் பணியாற்றி உள்ளோம். அவருடன் தொடா்ந்து இருப்பது எங்களின் கடமை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT