முன்விரோதத்தால் பெண் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸாா் ஒருவரை கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், கோடி திம்மனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சித்தகங்கம்மா. இவா் அண்மையில் ஆடுகளை மேய்க்கச் சென்றப்போது, அவரை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அதே கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் என்பவரை கைது செய்தனா். விசாரணையில், நிலப் பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சித்தகங்கம்மாவை கொலை செய்ததாக நாகராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோரா போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.