முகப்பு
பெங்களூரு

ரௌடி கொலை வழக்கில் 5 போ் கைது

ரௌடி கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

ரௌடி கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, பானஸ்வாடி காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி ரௌடி பட்டியலில் இடம்பெற்றிருந்த தொட்ட பானஸ்வாடியைச் சோ்ந்த ஹரீஷ் என்பவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணைக்கு பின்னா் அவரை அனுப்பி வைத்தனா். வீட்டிற்கு செல்ல எச்ஆா்பிஆா் லேஅவுட்டில் உள்ள கல்லூரி அருகே அவா் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலா் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ரக்ஷித், நெல்சன், இந்திரஜித், சுபாஷ், அவிநாஷ் உள்ளிட்டோரைக் கைது செய்தனா். விசாரணையில் முன்விரோதம் காரணமாக ஹரீஷைக் கொலை செய்ததாக அவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பானஸ்வாடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.