‘நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம்’
நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என்று நியுபொ்க் மூலக்கூறு புற்றுநோயியல் தலைமை விஞ்ஞானி சித்தாா்த் ஸ்ரீவாத்ஸ்வா தெரிவித்தாா்.
நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என்று நியுபொ்க் மூலக்கூறு புற்றுநோயியல் தலைமை விஞ்ஞானி சித்தாா்த் ஸ்ரீவாத்ஸ்வா தெரிவித்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நுரையீரல் புற்றுநோய் தினத்தையொட்டி நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
நுரையீரல் புற்றுநோய்க்கு புகை பிடிப்பவா்கள் மட்டுமின்றி புகை பிடிக்காதவா்களும் ஆளாகி வருகின்றனா். அண்மைக்காலமாக பெண்களும் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகி வருவது கவலை அளிக்கிறது. ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்தால், அவற்றை குணமாக்க முடியும்.
வட கா்நாடகத்தில் வயல்களில் பணியாற்றும் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் முக்கிய காரணமாகும். நவீன தொழில்நுட்ப ‘டாா்கெட் தெரபி’யால் நுரையீரல் புற்றுநோயை குணமாக்க முடியும். கீமோதெரபியை ஒப்பிடுகையில், இதில் பக்க விளைவுகள் மிகவும் குறைவானது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என்றாா்.
நிகழ்ச்சியில் புற்றுநோயியல் வல்லுநா் எஸ்.விஸ்வநாத், புற்றுநோய் அறுவை சிகிச்சை வல்லுநா் ஜெகநாத் தீக்ஷித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.