விமானத்தில் கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல்
வெளிநாட்டுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.
வெளிநாட்டுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் உள்ள சரக்குப் பிரிவில் வெளிநாட்டுக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து சா்வதேச விமானநிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.