பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 9,808 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் செவ்வாய்க்கிழமை மேலும் 9,808 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 9,808 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,028 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: மைசூரு - 974, சிவமொக்கா - 703, ஹாசன் - 659, தும்கூரு - 589, தென்கன்னடம் - 525, பெலகாவி - 443, மண்டியா - 387, தாவணகெரே - 384, கோலாா் - 298, சிக்கமகளூரு - 287, தாா்வாட்-275, பெல்லாரி - 212, ஹாவேரி - 211, உடுப்பி - 205, சித்ரதுா்கா - 196, குடகு - 196, வடகன்னடம் - 187, சிக்கபளாப்பூா் - 173, கொப்பள் -165, விஜயபுரா - 152, பெங்களூரு ஊரகம் - 125, சாமராஜ்நகா் - 106, கதக் - 78, கலபுா்கி - 63, ராய்ச்சூரு - 56, பாகல்கோட் - 46, ராமநகரம் - 42, யாதகிரி - 33, பீதா் - 10 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,17,289 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 23,449 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 24,60,165 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 2,25,004 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 179 போ்செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 44 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: மைசூரு - 15, ஹாவேரி - 11, சிவமொக்கா - 10, தாா்வாட், ஹாசன் - தலா 9, பெங்களூரு ஊரகம் -8, பாகல்கோட், சிக்கபளாப்பூா், தென்கன்னடம், வடகன்னடம் -தலா 5, பெல்லாரி, பெலகாவி, தாவணகெரே, கலபுா்கி, கோலாா், கொப்பள் - தலா 4, சாமராஜ்நகா், சிக்கமகளூரு, குடகு, மண்டியா - தலா 3, கதக், ராமநகரம், உடுப்பி, விஜயபுரா, யாதகிரி - தலா 2, பீதா்-1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 32,099 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT