பெங்களூரு

பெங்களூருவில் நவ. 28 முதல் நிலக்கடலை திருவிழா

பெங்களூரில் பசவனகுடியில் உள்ள நந்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் நிலக்கடலை திருவிழா நவ.12 முதல் தொடங்குகிறது.

DIN

பெங்களூரில் பசவனகுடியில் உள்ள நந்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் நிலக்கடலை திருவிழா நவ.12 முதல் தொடங்குகிறது.

பெங்களூருவின் பழைமையான அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் நிலக்கடலை திருவிழா, ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தின் கடைசி திங்கள்கிழமை நடந்துவருகிறது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிலைக்கடலை திருவிழா நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கரோனா பெருந்தொற்றுகான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதால், நிகழ் ஆண்டில் நிலக்கடலைத் திருவிழா நடத்த பெங்களூரு மாநகராட்சி அனுமதிஅளித்துள்ளது. அதன்படி, நிகழாண்டுக்கான நிலக்கடலைத் திருவிழா நவ. 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 2 நாள்களுக்கு நடக்கவிருக்கிறது.

பெங்களூரு, பசவனகுடியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நந்தி கோயில், பெரியவிநாயகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு நிலக்கடலைத் திருவிழா நடத்தப்படுகிறது. மரபை நினைவூட்டும் வகையில் நடக்கும் நிலக்கடலைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துவருகின்றன. இந்த நிலக்கடலைத் திருவிழா நவ.28-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அதிகாரப்பூா்வமாக தொடங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT