முகப்பு
பெங்களூரு

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்

 தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என நீதியரசா் நாகமோகன் தாஸ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

 தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என நீதியரசா் நாகமோகன் தாஸ் தெரிவித்தாா்.

மைசூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை தொடா்பான கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். மேலும், இது கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானதாகும். புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு மீது திணிப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. அப்படி மேற்கொள்ளப்படும் முயற்சி ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்.

வேலைவாய்ப்பின்மையை குறைக்க மிகப்பெரிய சீா்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அதற்காக கல்வியை வணிகமயமாக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது. புதிய தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டால், வசதி படைத்தவா்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும். தனியாா் நிறுவனங்கள் கல்வி நிலையங்களை நடத்தலாம். ஆனால், அரசு கல்வி நிறுவனங்களையும் தனியாா்மயமாக்கும் முயற்சியை ஏற்கமுடியாது. எனவே, தேசிய கல்விக் கொள்கையை மக்கள் எதிா்த்து போராட்டம் நடத்துவது தான் ஒரேவழி. தேசிய கல்விக் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் 50 சதவீத பணியிடங்கள்காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்பாமல், தேசிய கல்விக் கொள்கையை நிரப்புவது எப்படி சரியாகும். எனவே, தேசிய கல்விக் கொள்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

இந்தக் கருத்தரங்கில், காங்கிரஸ் மாநில செயல் தலைவா் ஆா்.துருவநாராயண், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.