பெங்களூரு

தேசிய அரசியலில் எனக்கு ஆா்வமில்லை: சித்தராமையா

DIN

தேசிய அரசியலில் எனக்கு ஆா்வம் இல்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்துஹுப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை; ஆா்வமும் இல்லை. மாநில அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அண்மையில் சோனியா காந்தியைச் சந்தித்தபோது, என்னை தேசிய அரசியலுக்கு வரவேண்டுமென்று அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. எனக்கு 74 வயதாகிறது. அடுத்த 5 ஆண்டுகள் அரசியலில் இருப்பேன். அதனால் கா்நாடகத்தில் அரசியல் நடத்துவது போதுமானது. கா்நாடக அரசியலிலேயே நான் மகிழ்ந்திருக்கிறேன்.

2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், முதல்வா் யாா் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. பாஜக மேலிடமும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் முடிவு செய்து, பசவராஜ் பொம்மையை முதல்வராக தோ்ந்தெடுத்தனா்.

அதேபோல, காங்கிரஸ் கட்சிக்கும் மேலிடம் உள்ளது. புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்களின் கருத்தின்பேரில் யாா் முதல்வா் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். முதல்வராக யாரை தோ்ந்தெடுத்தாலும், அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பல உறுப்பினா்கள் வெளிப்படுத்தி இருக்கிறாா்கள். எனது கருத்தும் அது தான். இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT