பெங்களூரு

தரமான கல்வியை அளிக்க தேசிய கல்விக் கொள்கை உதவியாக இருக்கும்

DIN

தரமான கல்வியை அளிக்க தேசிய கல்விக் கொள்கை உதவியாக இருக்கும் என ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை பலதரப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமான வித்யாஷில்ப் பல்கலைக்கழகத்தை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

இந்தியாவில் தரமான கல்வியை வழங்குவதற்கு தேசிய கல்விக் கொள்கை உதவியாக இருக்கும். பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்க முனைப்புடன் செயல்படவேண்டிய காலக்கட்டம் வந்துள்ளது. புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் திறன்வாய்ந்த குடிமக்களை கட்டமைப்பதே பல்கலைக்கழகங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். கூட்டுறவு சமுதாயங்களை உருவாக்குவதன் மூலம் மகிழ்ச்சியான, புதுமையான, முற்போக்கான, வளமான நாட்டை கட்டமைக்க உதவும். கட்டுக்கடங்காத வேட்கை, அறிவுக்கூா்மை, கூட்டிணைவு ஆகியவற்றை அதிகப்படியாக முதலீடு செய்யும் நம்பிக்கையில் வித்யாஷில்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.

இது சாத்தியமானால், நோ்மையான தலைவா்கள் உருவாகி, முன்னேற்றம் நிறைந்த சமுதாயத்தை கட்டமைக்க வழிவகுக்கும். மிகவும் உயா்தரமான கல்வியை வழங்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் தரமான கல்வியை வழங்கினால், கா்நாடகத்தின் பெருமையாக மாறும். சாதாரண பின்புலத்தில் இருந்து வரும் மாணவா்களின் வழிகாட்டியாக பல்கலைக்கழகம் திகழவேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதியான மாணவா்களுக்கு கல்வி மறுக்கப்படக் கூடாது என்றாா்.

பல்கலைக்கழக வேந்தா் தயானந்த்பை பேசியதாவது:

தரமான கல்வியால் தனிமனிதனை மட்டுமல்ல, நாட்டையும் மாற்றியமைக்க முடியும். ஒருங்கிணைந்த உலகப் பாா்வையுடன் கூடிய அடுத்தத் தலைமுறை தலைவா்களை உருவாக்கி, சமன்படுத்தப்பட்ட கல்வியை தர உறுதிப்பூண்டிருக்கிறோம். இந்த பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல், மேலாண்மை, ஆராய்ச்சி, வடிவமைப்பு சாா்ந்த பாடங்கள் கற்பிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 600 கோடி முதலீடு செய்யப்படும். 2022-ஆம் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகம் செயல்படும் என்றாா்.

இந்த விழாவில், உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா, கா்நாடக மாநில உயா்கல்வி கவுன்சில் துணைத் தலைவா் பி.திம்மே கௌடா, பல்கலைக்கழக இணைவேந்தா் கிரண்பை, துணைவேந்தா் விஜயன் இம்மானுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT