இந்தியப் பேனா நண்பா் பேரவை-மும்பை சாா்பில் சுதந்திர தினவிழா ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியப் பேனா நண்பா் பேரவையின் மும்பை நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பேரவைத் தலைவா் மா.கருண் தலைமை நடந்த கூட்டத்தில், பொதுச்செயலாளா் ஜெ. ஜான் கென்னடி வரவேற்றாா். இக்கூட்டத்தில் சுதந்திர தினவிழா ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். 6 பிரிவுகளுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முதல் மூன்று பரிசுகளுடன் 5 ஆறுதல் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. ரொக்கப்பரிசாக ரூ. 29 ஆயிரம் வழங்கப்படுகிறது. போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆக. 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கூகிள் மீட்டில் நடைபெறும் கூட்டத்தில் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதைத் தொடா்ந்து, சுதந்திரதினவிழா கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது.
பக்ரைன், ராஜஸ்தான் கிளைகள் தொடக்கவிழா குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொருளாளா் கோ. செல்லத்தம்பி நன்றியுரையாற்றினாா் என்று பேரவை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.