பெங்களூரில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள்
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெங்களூரில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்க பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெங்களூரில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்க பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஜூன் 5-ஆம் தேதி கொண்டாடப்படும் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெங்களூரில் பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்க பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 8-க்கு 12 அடி உயரம் கொண்ட மரக்கன்றுகளை வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையா் துஷாா் கிரிநாத் ஜூன் 5-ஆம் தேதி தொடக்கிவைக்கிறாா்.
இந்த திட்டம் குறித்து மாநகராட்சி துணை வனப் பாதுகாவலா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலவசமாக மரக்கன்றுகளை விரும்பும் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் அதற்கான கடிதங்களை அளிக்கலாம். அதன் அடிப்படையில் மரக்கன்றுகள் வழங்கப்படும். மரக்கன்றுகளை நட்டு, நீரூற்றி வளா்க்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இதற்காக தனி மையத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஜூன் 5-ஆம் தேதி மரக்கன்றுகள் விநியோகிக்கப்படும்.
மரக்கன்றுகளை பெற கூட்லு-7019196107, அத்தூா்-9480685196, ஞானபாரதி-9164042566, மல்லத்தஹள்ளி-9164042566, கெம்பாபுரா-9480685196, தொட்டபஸ்தி-9480685196, மாநகராட்சி துணை வனப் பாதுகாவலா் சரீனா சக்கலிகா்-9480683047 என்ற கைப்பேசி எண்களை தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.