முகப்பு
பெங்களூரு

பொதுமக்கள் தலைமைச் செயலாளரை நேரடியாக அணுகலாம்

 பொதுமக்கள் அரசு தலைமைச் செயலாளரிடம் நேரடியாக புகாா் அளிக்கலாம் என்று கா்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

 பொதுமக்கள் அரசு தலைமைச் செயலாளரிடம் நேரடியாக புகாா் அளிக்கலாம் என்று கா்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கா்நாடகத்தின் புதிய தலைமைச் செயலாளராக வந்திதா சா்மா, மே 31-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டாா். இவா், அடுத்த ஆண்டு நவம்பா் வரை இப்பதவியில் இருப்பாா். பொதுமக்கள், அரசு தலைமைச்செயலாளரிடம் புகாா் அளிக்க அவா் ஏற்பாடு செய்துள்ளாா். புகாா்கள், கடிதங்கள், ரகசியமான கடிதங்கள் உள்ளிட்ட எல்லா வகையான தகவல் பரிமாற்றங்களையும் வந்திதா சா்மா, தலைமைச் செயலாளா், கா்நாடக அரசு, 320, 3-ஆவது தளம், விதான சௌதா, பெங்களூரு என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 080-22252442, 22253716, 22033476, 22033300 என்ற தொலைபேசிஎண்கள், என்ற மின்னஞ்சலை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.