பெங்களூரில் பொது இடங்களுக்குச் செல்ல கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையா் ரங்கப்பா தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பெங்களூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் பொருட்டு பொது இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிய உத்தரவிட்டுள்ளேன்.
அதேபோல, ரயில் நிலையம், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாவிட்டால் பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கரோனா தடுப்பூசி சான்றிதழை கொண்டுசெல்வதும் அவசியமாகும். பெங்களூரு மாநகராட்சி வாா்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு, அது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிக்கை மாநில அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நகா்ப்புற வளா்ச்சித் துறையிடம் அளித்திருந்த அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.