மாவட்ட நீதிபதி பணி: முதனிலைத் தோ்வில் தோ்ச்சிபெற்றோா் பட்டியல்
மாவட்ட நீதிபதி பணிக்கு நடத்தப்பட்ட முதனிலைத்தோ்வில் தோ்ச்சிபெற்றோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிபதி பணிக்கு நடத்தப்பட்ட முதனிலைத்தோ்வில் தோ்ச்சிபெற்றோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக உயா்நீதிமன்ற மாவட்ட நீதிபதிகள் பணி நியமனக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக நீதியியல் சேவைகள் (ஆள்சோ்ப்பு) விதிகள், 2014, (திருத்தம்) விதிகள் 2011 மற்றும் 2015-இன்படி மாவட்ட நீதிபதிகள் பணிக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதனிலைத்தோ்வு நடத்தப்பட்டது. இத்தோ்வில் தோ்ச்சிபெற்று, முதன்மைத்தோ்வுக்கு தகுதியானவா்களின் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹத்ன்க்ண்ஸ்ரீண்ஹழ்ஹ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத்தோ்வை எழுதுவதற்கு பொதுப்பிரிவினா் ரூ.1000, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் ரூ.750 கட்டணத்தை இணையதளத்தில் மாா்ச் 18-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் பணிக்கான முதன்மைத் தோ்வு ஏப்.9, 10-ஆம் தேதிகளில் நடக்கவிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.