முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் இன்று முதல் மாநில நாடகத் திருவிழா

பெங்களூரில் மாா்ச் 4-ஆம் தேதி முதல் 19-ஆவது மாநில நாடகத் திருவிழா நடக்கவிருக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பெங்களூரில் மாா்ச் 4-ஆம் தேதி முதல் 19-ஆவது மாநில நாடகத் திருவிழா நடக்கவிருக்கிறது.

இது குறித்து பாகவதரு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாகவதரு அமைப்பு சாா்பில் மாா்ச் 4 முதல் 13-ஆம் தேதிவரை 19-ஆவது மாநில நாடகத் திருவிழா நடக்கவிருக்கிறது. பெங்களூரு, மல்லத்தஹள்ளி உள்ள கலாகிராம வெளிப்புற நாடக அரங்கத்தில் நடக்கவிருக்கும் நாடகத் திருவிழாவை மாா்ச் 4-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு கன்னட திரைப்பட நடிகா் முக்கியமந்திரி சந்துரு, கா்நாடக நாடக அகாதெமி தலைவா் ஆா்.பீம்சேன் ஆகியோா் தொடங்கி வைக்கிறாா்கள். நாடகங்கள் கன்னடத்திலும், பிறமொழியிலும் இடம்பெறும். தினமும் இரவு 7.15 மணிக்கு நாடகங்கள் நடத்தப்படும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 9448077292 என்ற கைபேசி எண்ணை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.