கோயில்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள திட்டம்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை
கோயில்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வா் கா்நாடக பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
கோயில்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வா் கா்நாடக பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
கோயில்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளுமாறு கேட்கும் கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. பக்தா்களின் இந்தக் கோரிக்கையைச் செயல்படுத்தும் வகையில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கப்படும். கோயில்களில் வளா்ச்சிப்பணிகளைச் செயல்படுத்துவதற்கான உரிமையை வழங்குவதற்கான சட்ட நடவடிகைகள் எடுக்கப்படும்.
ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூஜாரிகள், ஊழியா்களுக்கு உதவும் வகையில் நிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை ரூ. 48 ஆயிரத்தில் இருந்து ரூ. 60 ஆயிரமாக உயா்த்தப்படும். கோயில்களில் பல்வேறு சேவைகளை இணையவழியில் வழங்குவதற்காக ஒருங்கிணைந்த கோயில்மேலாண்மை முறை மென்பொருள் செயல்படுத்தப்படும்.
கா்நாடகத்தில் இருந்து காசிக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் 30 ஆயிரம் பக்தா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் மானியம் வழங்கப்படும். புனிதத்தலங்களுக்கு குறைந்த செலவில் செல்வதை உறுதிப்படுத்த ‘புனிதப்பயணம்’ என்ற திட்டம் கா்நாடக மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் புனிதப் பயணிகள் தங்கும் விடுதி கட்டுவதற்கு ரூ. 85 கோடி ஒதுக்கப்படுகிறது. முதல்கட்டப் பணிகளுக்கு ரூ. 45 கோடி வழங்கப்படும். கல்வி, சுகாதாரம், சமூக சேவையில் பங்காற்றிவரும் மடங்கள், அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றாா்.