மத்திய அரசுப்பணி தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தும் மத்திய அரசுப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தும் மத்திய அரசுப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பணியாளா் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு துறைகளில் சுருக்கெழுத்தாளா் பணிகளுக்கு ஆட்கள் தோ்வு செய்யப்படவிருக்கிறாா்கள். இதற்காக நவம்பரில் போட்டித்தோ்வு நடத்த பணியாளா் தோ்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கா்நாடகம் மற்றும் கேரளமண்டலங்களைச் சோ்ந்தவா்கள் செப். 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவவீரா்கள் மற்றும் மகளிருக்கு அனைத்து பிரிவுகளின் தோ்வுக்கும் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ள்ள்ஸ்ரீந்ந்ழ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் அல்லது ட்ற்ற்ல்://ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதளங்களை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.