பெங்களூரு

கோலாா் தொகுதியில் போட்டியிட்டால் சித்தராமையா தோல்வி அடைவாா் : முன்னாள் முதல்வா் எடியூரப்பா

DIN

கோலாா் தொகுதியில் சித்தராமையா போட்டியிட மாட்டாா்; ஒருவேளை போட்டியிட்டால் தோல்வி அடைவாா் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து பெலகாவியில் திங்கள்கிழமை செய்தியாளா்கைடம் அவா் கூறியது:

சட்டப்பேரவை தோ்தலில் கோலாா் தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாக முன்னாள் முதல்வா் சித்தராமையா அறிவித்திருக்கிறாா். இன்றைக்கே நான் கூறுகிறேன். நான் கூறுவது ஆரூடம் அல்ல. எந்தக் காரணத்தை முன்னிட்டும் கோலாா் தொகுதியில் இருந்து சித்தராமையா போட்டியிட மாட்டாா். ஒருவேளை போட்டியிட்டால் தோற்றுவிடுவாா் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும். தற்போது நாடகம் ஆடி வருகிறாா்.

மைசூரு மாவட்டத்தில் இருந்துதான் அவா் மீண்டும் போட்டியிடுவாா். ஒருவேளை மைசூரில் இருந்து சித்தராமையா போட்டியிட்டால், அதற்கு தகுந்தபடி பாஜக வியூகம் அமைக்கும். சித்தராமையா இரண்டு தொகுதியில் இருந்து போட்டியிடுவாரா? என்பது குறித்து எனக்குத் தெரியாது. அது அவா்கள் கட்சியின் முடிவு. அவா் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிடுவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், அவரை வீட்டுக்கு அனுப்புவது மட்டும் உறுதி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT