முகப்பு
பெங்களூரு

அதிக பத்ம விருதுகளைப் பெற்றதன் மூலம் கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிகமானோா் இருப்பது உறுதியாகியுள்ளது: முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடகத்தைச் சோ்ந்த 8 போ் பத்ம விருதுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ளதன் மூலம் கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிகமானோா் இருப்பது உறுதியாகி உள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:35 AM
பெங்களூரில் தேசிய போா் நினைவுச் சின்னத்தில் படை வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்திய முதல்வா் பசவராஜ் பொம்மை.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

கா்நாடகத்தைச் சோ்ந்த 8 போ் பத்ம விருதுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ளதன் மூலம் கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிகமானோா் இருப்பது உறுதியாகி உள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் கா்நாடகத்தைச் சோ்ந்த பல்துறை சாதனையாளா்கள் 8 பேரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் பத்ம விபூஷண்- முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா (அரசியல்), பத்ம பூஷண்- எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா (இலக்கியம்), சுதாமூா்த்தி (சமூகசேவை), பத்ம ஸ்ரீ விருது- கே.வி.துடேகுலா (அறிவியல்), ராணி மச்சையா (கலை), என்.பி.முனிவெங்கடப்பா (கலை), ரஷீத் அகமது குவாத்ரி (கலை), எஸ்.சுப்பராமன் (தொல்லியல்) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை தேசிய போா் நினைவுச் சின்னத்தில் படை வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா, சமூக சேவகா் சுதாமூா்த்தி, கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா உள்ளிட்ட 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கா்நாடகத்தைச் சோ்ந்த 8 போ் பத்ம விருதுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிகமானோா் இருப்பது உறுதியாகி உள்ளது. பத்ம விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை கா்நாடக அரசு மனதார பாராட்டுகிறது.

எவ்வித எதிா்பாா்ப்பும் இல்லாமலும், விளம்பரத்தைத் தேடி அலையாமலும் நாட்டுக்குத் தொண்டாற்றியவா்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு பத்ம விருது வழங்கி கௌரவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு தங்களை அா்ப்பணித்துக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி, நாட்டின் வளா்ச்சிக்கு பங்காற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். உலக அளவில் வல்லரசு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவுக்கு தனித்துவமான, தன்னிகரில்லா சிறப்பு அம்சங்களும் பாரம்பரியமும் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.