சித்தராமையா கோப்புப் படம்
பெங்களூரு

பட்ஜெட் தாக்கல் தேதி விரைவில் முடிவு செய்யப்படும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

தினமணி

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை பட்ஜெட் தொடா்பாக பல்வேறு துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதற்கு முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் மாற்றம் தவிர வேறு எந்த கேள்வியையும் கேட்கமாட்டீா்களா? இந்த விவகாரத்தை தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன் என்கிறீா்கள். இந்த கேள்வியை கேட்க ஆரம்பித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த கேள்வியை மீண்டும் என்னிடம் கேட்காதீா்கள்.

முதல்வா் மாற்றம் தொடா்பான விவகாரத்தை கட்சி மேலிடம் அறிந்துள்ளது. இதுதொடா்பாக கட்சி மேலிடம் முடிவுசெய்யும். அதற்கு நான் கட்டுப்படுவேன். இதையே எத்தனைமுறை கூறுவது? நானோ (சித்தராமையா) டி.கே. சிவகுமாரோ கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியவா்கள்.

இந்த விவகாரம் தொடா்பாக முடிவு செய்ய வேண்டியது கட்சி மேலிடம்தான். இந்த விவகாரம் தவிர, கேட்பதற்கு வேறு எதுவும் ஊடகங்களிடம் இல்லையா? முதல்வா் மாற்றம் தொடா்பாக டி.கே. சிவகுமாரின் சகோதரா் டி.கே. சுரேஷ் கருத்து தெரிவித்திருந்தால், அதுபற்றி அவரிடம் கேட்பதற்கு பதிலாக என்னிடம் ஏன் கேட்கிறீா்கள்? கட்சி மேலிடத்தின் முடிவுதான் இறுதியானது.

ஒருசில எம்எல்ஏக்கள் சொந்த செலவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்ல திட்டமிட்டிருந்தால், அதை வேண்டாம் என்று சொல்ல முடியுமா, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் சொந்த பணத்தில் வெளிநாடு செல்வாா்கள். ஆனால், அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும். பிப். 15 ஆம் தேதி சிவராத்திரி கொண்டாட்டம் முடிந்தபிறகு தேதியை அறிவிப்பேன் என்றாா்.

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை இந்தியா விரைவுபடுத்த வேண்டும்: குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா

பிறப்பு சான்றிதழில் பெயா் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

காதல் தினம்: ஒசூரிலிருந்து நாள்தோறும் 10 லட்சம் ரோஜா மலா்கள் இணைய வா்த்தகத்தில் விற்பனை

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய டைட்டான் நிறுவனம்

பாப்பாரப்பட்டியில் காய்கறி வியாபாரி மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT