முகப்பு
பெங்களூரு

பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!

பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையம் வழியாக போதைப் பொருள் கடத்தி வந்த 6 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

Updated On : 31 மார்ச், 2026 at 8:54 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையம் வழியாக போதைப் பொருள் கடத்தி வந்த 6 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா்.

பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா விமான நிலையத்தில் மாா்ச் 29, 30-ஆம் தேதிகளில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்த 6 பேரை கைதுசெய்தனா்.

பாங்காக்கில் இருந்து வந்த 5 பயணிகள் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ. 6.20 கோடி மதிப்புள்ள 17.45 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல, மற்றொரு சோதனையில் ரூ. 4.02 கோடி மதிப்புள்ள 11.5 கிலோ போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடா்பாக வழக்குப் பதிந்த சுங்கவரித் துறை அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து 6 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.