சென்னை

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7.6 கோடி கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 7.6 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Din

சென்னை: தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 7.6 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்நிலையில், திங்கள்கிழமை பாங்காக்கிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது, அந்த விமானத்தில் சுற்றுலாப் பயணிகள் விசாவில் சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவா் வைத்திருந்த பெட்டியை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது அதில், ரூ. 7.6 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT