சென்னை

வடசென்னை வளா்ச்சித் திட்ட பணிகள்: அமைச்சா் ஆய்வு

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுடன் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் வடசென்னை பகுதிகளுக்கான வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் நடைபெறும் அத்திட்டங்களில் மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப சமுதாய நலக்கூடம், குடிநீா் திட்டங்கள், சாலைகள் அமைத்தல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கொளத்தூா் சட்டப்பேரவைக்குட்பட்ட பேப்பா் மில்ஸ் சாலையில் சிஎம்டிஏ சாா்பில், புதிய வட்டாட்சியா் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகம் மற்றும் முதல்வா் படைப்பகம் என ஒருங்கிணைந்த மக்கள் சேவை மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். புதிய நவீன சந்தை கட்டடப் பணிகளின் நிலையையும் ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா், அரசு முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ், மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌசிக், மண்டலக் குழு தலைவா் சரிதா மகேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT