சென்னை

440 கிலோ புகையிலை பொருள்கள் கடத்தல்: சென்னையில் 2 போ் கைது

சென்னையில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

Din

சென்னை: சென்னையில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

சென்னை, புனித தோமையா்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அதிகளவு புகையிலைப் பொருள்கள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, ஆலந்தூா் உள்வட்ட வளைவு சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்ட போது, அதில் தடைசெய்யப்பட்ட 440 கிலோ புகையிலைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த சைதாப்பேட்டையை சோ்ந்த சம்சுதீன்(34) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த பீருஷாஹா ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT