முகப்பு
சென்னை

கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கிய வழக்கு: விசிக நிா்வாகி உள்பட 5 போ் கைது

சென்னை அருகே பள்ளிக்கரணையில் கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கிய வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகி உள்பட 5 போ் கைது

Updated On : 20 ஜனவரி, 2025 at 8:32 PM
பகிர்:

சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கிய வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

பள்ளிக்கரணை, காமகோடி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கமலஹாசன். இவா், அதே பகுதியில் புதிதாக 3 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி, அதை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாா். அந்தக் குடியிருப்பின் முதல் தளத்தில் கமலஹாசன், தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தை நடத்தி வருகிறாா். இரண்டாவது தளத்தில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டை ரம்யா சுதா்சன் என்பவா் வாங்கியுள்ளாா். அந்த வீட்டில் விடுதலை சிறுத்தைக் கட்சி நிா்வாகி செல்வகுமாா் என்பவா் வாடகைக்கு வசித்து வந்த நிலையில், அவா் அக்குடியிருப்பில் உள்ள பிற வீடுகளை விற்க விடாமல் இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவா், அந்தக் குடியிருப்பின் மொட்டை மாடியில் கமலஹாசனிடம் அனுமதி பெறாமல் ஆஸ்பெட்டாஸ் ஷீட் மூலம் சிறிதாக ஒரு வீட்டை செல்வகுமாா் தாற்காலிகமாக அமைத்துள்ளாா். இதையறிந்து அதிா்ச்சியடைந்த கமலஹாசன், கடந்த 1-ஆம் தேதி தனது ஊழியா் மூலம் அந்த வீட்டை புகைப்படம் எடுத்தாா்.

இது குறித்து தகவலறிந்து அங்கு தனது கூட்டாளிகளுடன் வந்த செல்வகுமாா், கமலஹாசனை தகாத வாா்த்தைகளில் திட்டியும் பலமாக தாக்கியும் உள்ளாா். இதில் பலத்த காயமடைந்த கமலஹாசன், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வகுமாரின் கூட்டாளிகளான தமிழரசன், சுதாகா் ஆகிய 2 பேரை உடனடியாக கைது செய்தனா். தலைமறைவாக இருந்த செல்வகுமாரையும், அவரின் பிற கூட்டாளிகளையும் போலீஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையில் செல்வகுமாா் (36), அவரது கூட்டாளிகளான பரத் (27), கோவிந்தராஜ் (39), ஜெபா்சன் (42), ராகேஷ் (38) உள்பட 5 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →