சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் நியமன உறுப்பினராவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்து சட்டமாக்கியுள்ளாா். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்துக்கு உறுப்பினராக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆண், பெண் என 2 மாற்றுத் திறனாளி உறுப்பினா்கள் நியமிக்கப்படவுள்ளனா். ஆகவே, சென்னை மாநகராட்சி இணையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் வரும் 17- ஆம் தேதி வரையில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை மாநகராட்சி ஆணையரிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ வரும் 17- ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்குள் அளிக்கவேண்டும் எனக்கு றிப்பிடப்பட்டுள்ளது.