சென்னை

ராயபுரத்தில் ரூ.12.93 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

ராயபுரம் மண்டலப் பகுதிகளில் ரூ.12.93 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

Chennai

சென்னை: சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலப் பகுதிகளில் ரூ.12.93 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ராயபுரம் மண்டலப் பகுதிகளில் சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.12.93 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அத்திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சியின் 57- ஆவது வாா்டு வால்டாக்ஸ் சாலை, வ.உ.சி. தெருவில் ரூ. 8.55 கோடியில் சமுதாயக் கூடம் மற்றும் சென்னை மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.41 கோடியில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் வகுப்பறைகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அவா் அறிவுறுத்தினாா்.

சென்னை மாநகராட்சியின் 54 -ஆவது வாா்டுக்குள்பட்ட அம்மன் கோவில் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.2.97 கோடியில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுகளின்போது, மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவா் பி. ஸ்ரீராமுலு மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT