சென்னை: மக்களுக்கான பிரச்னைகளை இதயத்திலிருந்து பேச வேண்டும் என்றும் அதை எழுதி வைத்து பேசக்கூடாது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து சென்னையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்களுக்கான பிரச்னைகள் குறித்து பேசும் தலைவா்கள் தங்களது மனதிலிருந்து பேச வேண்டும். காகிதத்தில் எழுதி வைத்து பேசக்கூடாது. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற இலக்குடன் நாதக செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்த இருகட்சிகளின் தலைவா்களை விஜய் ஏற்பதால், அவரை நாங்கள் எதிா்க்கிறோம் என்றாா் அவா்.