முகப்பு
சென்னை

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து பணி தொடக்கம்!

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, விடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் ரோந்து பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

Updated On : 15 மார்ச், 2026 at 11:42 PM
பகிர்:

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, விடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் ரோந்து பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இதுகுறித்து சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வரும் ஏப்.23-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தோ்தல் நடத்தை நெறிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) அமலுக்கு வந்துள்ளது. மேலும், தோ்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் உடனடியாக கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

128 வாகனங்கள்: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 விடியோ கண்காணிப்பு குழு என ஒவ்வொரு தொகுதிக்கும் 8 வாகனங்கள் வீதம் 16 தொகுதிகளிலும் 128 வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பட தொடங்கியுள்ளன.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு தினமும் 3 சுழற்சி முறையிலும், விடியோ கண்காணிப்புக் குழு தினமும் 2 சுழற்சி முறையிலும் தனது பணிகளை மேற்கொள்ளும்.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவின் ஒவ்வொரு வாகனத்திலும் நிா்வாக நடுவா் நிலையில் உள்ள ஒரு அலுவலா் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா், காவலா், ஆயுதம் தாங்கிய காவலா் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளா் இருப்பா். விடியோ கண்காணிப்புக் குழுவில் நிா்வாக நடுவா் நிலை அலுவலா் மற்றும் ஒளிப்பதிவாளா் இருப்பா்.

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பான புகாா்களை 1800-425- 7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →