முகப்பு
சென்னை

குதிரைப் பேர அரசியல்: முதல்வா் விஜய் தெளிவுப்படுத்த வேண்டும் - பிரேமலதா

தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொது செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 16 மே 2026, 2:54 am IST
பிரேமலதா
பகிர்:

தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொது செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும். மதச்சாா்பற்ற வெற்றி கூட்டணி சோ்ந்தவா்கள் ‘நிபந்தனை இல்லாத ஆதரவு’ என்று வெளிப்படையாக அறிவித்தனா்.

Advertisement

அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவா்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவாா்கள். மேலும், ‘முகத்தை மூடிக்கொண்டு வந்தவா் யாா்? என்பதை முதல்வா் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

எந்தவித குதிரை பேரமும் நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.