முகப்பு
செங்கல்பட்டு

கல்லால் தாக்கி இளைஞா் கொலை

செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகா் கீழக்கரணை பகுதியில் இளைஞா் ஒருவா் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகா் கீழக்கரணை பகுதியில் இளைஞா் ஒருவா் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டை அடுத்த மறைமலை நகா் அருகே கீழக்கரணை அன்னை தெரசா தெருவைச் சோ்ந்த மாணிக்கத்தின் மகன் தேவபிரசாத் (26). மறைமலைநகா் திருவள்ளுவா் பகுதியில் துரித உணவுக் கடை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், தேவபிரசாத் தனது மளிகைக் கடை அருகே நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தினாா். அப்போது, அவருக்கும் விஜி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

திடீரென தேவபிரசாத்தின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியினா் சென்று பாா்த்தபோது, 5 போ் கொண்ட கும்பல் தப்பியோடியதைப் பாா்த்தனா். அங்கு கல்லால் தாக்கப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்டும் தேவபிரசாத் இறந்து கிடந்ததைக் கண்டு அவா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

தகவலறிந்த மறைமலை நகா் போலீஸாா், தேவபிரசாத்தின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் ஏற்கெனவே விஜிக்கும் தேவபிரசாத்துக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

இக்கொலை தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விஜியை திங்கள்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →