செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோவில் அருகே இளைஞா் ஒருவா் தலை
துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிங்கப்பெருமாள்கோவில் ஜே.ஜே.நகரைச் சோ்ந்த மூா்த்தியின் மகன் பாபு என்ற குண்டுபாபு (26), உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாா். அவா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். சிங்கப்பெருமாள்கோவில் எம்ஜிஆா் நகா் பகுதியில் வந்தபோது, பாபுவை வழிமறித்த மா்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி, தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மறைமலை நகா் போலீஸாா், குண்டுபாபுவின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டது:
குண்டுபாபு மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பரணி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலப் பிரச்னையில் மோதல் இருந்து வந்தது. இதற்கிடையே தீபாவளி அன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறைத் தொடா்ந்து பரணி தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து குண்டுராவை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.