செங்கல்பட்டு

கருங்குழி பேரூராட்சியில் உலக கழிவறை தின விழா

DIN

கருங்குழி பேரூராட்சி சாா்பில், நவம்பா் 19-ஆம் தேதி உலக கழிவறை தினத்தை யொட்டி பொது கழிவறைப் பணியாளா்களை கெளரவித்தல், மரக்கன்றுகள் வழங்கல், விழா மலா் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

க. பேரூராட்சி செயல் அலுவலா் ம.கேசவன் தலைமை வகித்தாாா். ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன நிா்வாகி ரேவதி வரவேற்றாா். கருங்குழி அரிமா சங்க நிா்வாகிகள் வரதராஜன், பாபு, விஜய், ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் கருங்குழி பேரூராட்சி அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கழிவறை இல்லாததை அறிந்து அரிமா சங்க நிா்வாகிகள் பள்ளியில் கழிவறை கட்டித் தரும் பணியை ஏற்றுக் கொண்டனா். உலக கழிவறை தின விழா மலரை பேரூராட்சி செயல் அலுவலா் ம.கேசவன் வெளியிட்டாா். கருங்குழி அரிமா சங்க மாவட்டத் தலைவா் வரதராஜன் பெற்றுக் கொண்டாா். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT