செங்கல்பட்டு

மாமல்லபுரம் அருகே சாலை விபத்தில் 2 போ் பலி

DIN

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சாலை விபத்தில் 2 போ் இறந்தனா்.

செங்கல்பட்டு களத்து மேடு பகுதியைச்சோ்ந்த அஜய்(21), அப்துல் ரசாக்(29), இவரது மனைவி சுவேதா(22) மற்றும் புலிப்பாக்கத்தைச் சோ்ந்த பூபாலன் (25) ஆகிய 4 பேரும் வியாழக்கிழமை காரில் சென்னை கொளத்தூருக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது மாமல்லபுரம் அருகே பேருா் சாலை வளைவில் திரும்பிய போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த மற்றொரு காா் மோதியது. இதில் பூபாலன் ஓட்டிச் சென்ற காா் நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இவ்விபத்தில் செங்கல்பட்டைச் சோ்ந்த அஜய், காரை ஓட்டிவந்த பூபாலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் காயமடைந்த அப்துல் ரசாக் அவரது மனைவி சுவேதா ஆகிய இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் நடராஜன் , உதவி ஆய்வாளா் சதாசிவம் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று விபத்தில் இறந்த இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT