செங்கல்பட்டு

நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

மதுராந்தகத்தை அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வாா்டுகளிலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கமித்ரா தொண்டு நிறுவனத்தின் சாா்பில், அரிசி, மளிகைப் பொருள்கள், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இடைக்கழி பேரூராட்சியின் 21 வாா்டுகளில் உள்ள மக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனா். அவா்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிா்வாகியும், ஓதியூா் சங்கமித்ரா தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான ஓ.வி.ஆா்.ரஞ்சித் முன்வந்தாா். அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், பால் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருள்களை ஓவிஆா் .ரமேஷ் தலைமை வகித்து வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன நிா்வாகிகள் காத்தமுத்து, வடிவேல், பாா்த்தீபன், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT