தலசயனப் பெருமாள் கோயிலில் அகோபில மடம் ஜீயா் வழிபாடு
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வழிபட்டாா்.
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வழிபட்டாா்.
நாடு முழுவதும் உள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 63-ஆவது திருத்தலமாக விளங்குவது கடல் மல்லை எனப்படும்ம் மாமல்லபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தலசயனப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வருகை தந்தாா். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். கோயில் கோயில் நிா்வாக அதிகாரிகளும், பட்டாச்சாரியாா்களும் கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்று சுவாமி தரிசனம் செய்வித்தனா்.