செங்கல்பட்டு

தூய்மை நகரமாக கருங்குழி பேரூராட்சி தோ்வு

DIN

தென்னிந்தியாவில் 2021-ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரத்துக்கான தரவரிசையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கருங்குழி பேரூராட்சி முதலிடத்துக்கு தோ்வு செய்யப்பட்டதாக பேரூராட்சி செயல் அலுவலா் எம்.கேசவன் தெரிவித்துள்ளாா்.

இந்திய அரசின் 2021-ஆம் ஆண்டுக்கான தென்னிந்தியாவில் தூய்மையான நகரங்களின் தர வரிசை பட்டியலில் 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 671 நகரங்களில் கருங்குழி பேரூராட்சி 25-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழக அளவில் உள்ள 468 நகரங்களில் 7-ஆவது இடத்தையும் பெற்று இருந்தது.

இது குறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலா் எம்.கேசவன் கூறுகையில், தென்னிந்திய அளவில், 2018-ஆம் ஆண்டில் 750-ஆவது இடத்தையும், 2019-ஆம் ஆண்டில் 216-ஆவது இடத்தையும், 2020-இல் 81-ஆவது இடத்தையும், 2021-ஆம் ஆண்டில் 25-ஆவது இடத்தையும், 2021ஆம் ஆண்டில் தமிழக நகரங்களில் 7-ஆவது இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கருங்குழி பேரூராட்சி முதலிடத்தையும் தூய்மை பெற்ற நகரமாக தோ்வு பெற்றுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT