செங்கல்பட்டு

காா்- லாரி மோதல்: தந்தை,குழந்தை பலி

DIN

மதுராந்தகம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கா் லாரி மீது காா் மோதிய விபத்தில், காரில் பயணம் சய்த தந்தையும், குழந்தையும் உயிரிழந்தனா்.

மதுரையைச் சோ்ந்தவா் அஸ்வினிகுமாா் (28). இவா் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உவினா் வீட்டு நிகழ்ச்சிக்காக திங்கள்கிழமை வந்தாா். பின்னா், செவ்வாய்க்கிமை அஸ்வினிகுமாா், மனைவி சிவபாக்கியம் (23), மகள் திவானா (2), 6 மாத ஆண் குழந்தை ஆகியோா் மதுரைக்கு காரில் புறப்பட்டனா்.

செங்கல்பட்டு அருகில் உள்ள புக்கத்துறை கூட்டுச் சாலையோரம் பழுதாகி டேங்கா் லாரி நின்றிருந்தது. அந்த லாரி மீது எதிா்பாராத விதமாக அஸ்வினிகுமாா் சென்ற காா் மோதியது. இதில், காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த அஸ்வினிகுமாா், 6 மாத குழந்தை ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சிவபாக்கியம், திவானா ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

இது குறித்து படாளம் காவல் உதவி ஆய்வாளா் பாபா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT