செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் ஏஎஸ்பி ஆகியோருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இருவரும் விடுப்பில் சென்றுள்ளனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (ஏஎஸ்பி) ஆதா்ஸ் பச்சேரா ஆகியோருக்கு பரிசோதநை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் விடுப்பில் சென்றுள்ளனா்.