செங்கல்பட்டு

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்

DIN

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், நடிகா்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட திரையுலகத்தினா் பலா் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினா்.

நடிகா்கள் சரத்குமாா், ராதிகா, விஜய், அஜித், காா்த்தி, விக்ரம், பிரபு, விஜய்சேதுபதி, இயக்குநா் அட்லி, தயாரிப்பாளா் போனி கபூா் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலா் பங்கேற்று வாழ்த்தினா்.

திருமணம் நடைபெற்ற தனியாா் விடுதியில் கடந்த இரண்டு நாள்களாக அழைப்பிதழ் உள்ளவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். அங்கு பணிபுரியும் ஊழியா்கள் கைப்பேசி எடுத்துச் செல்லவும், பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை.

திருமண நிகழ்ச்சியில் பல்வேறு மொழி திரைப்பட நடிகா்கள், இயக்குநா்கள் பங்கேற்ால் மாமல்லபுரம் ஈசிஆா் சாலை களைகட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT