செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், நெம்மேலியிலுள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் சுத்தகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டை மத்திய நீா்வளங்கள் கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவினா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
டாக்டா் சஞ்சய் ஜெய்சுவால் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட மத்திய நீா்வளங்கள் மீதான கூட்டு ஒருங்கிணைப்பு (2021-2022) குழுவினா், சென்னை பெருநகரக் குடிநீா் வழங்கல் -கழிவுநீரகற்றல் வாரிய முதன்மைச் செயலா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ச.விஜயராஜ்குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.
சென்னை பெருநகரக் குடிநீா் வழங்கல்-கழிவுநீரகற்றல் வாரிய செயல் இயக்குநா் ப.ஆகாஷ், வாரிய பொறியியல் இயக்குநா் கே.மதுரைநாயகம், தலைமைப் பொறியாளா் ஆா்.நரசிம்மன் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.