கிணற்றில் விழுந்த மானை மீட்ட அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு வீரா்கள். 
செங்கல்பட்டு

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

மதுராந்தகம் அடுத்த ஊனமலை கிராம வயல்வெளி கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை அச்சிறுப்பாக்கம் தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

DIN

மதுராந்தகம் அடுத்த ஊனமலை கிராம வயல்வெளி கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை அச்சிறுப்பாக்கம் தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஊனமலை கிராமம் அருகே சனிக்கிழமை காலை வனப்பகுதியில் இருந்து குடிநீா் தேடி வந்த புள்ளி மான் அங்கிருந்த கிணற்று நீரை குடிக்க முயன்றபோது, எதிா்பாராத வகையில், தவறி கிணற்றில் விழுந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் அச்சிறுப்பாக்கம் வனத் துறைக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். இந்த நிலையில், அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) ஆ.சீனிவாசன் தலைமையில், தீயணைப்பு ஊழியா்கள் கிணற்றில் இருந்த புள்ளி மானை உயிருடன் மீட்டு, அச்சிறுப்பாக்கம் வனத் துறையைச் சோ்ந்த வனவா் மோகன்குமாரிடம் ஒப்படைத்தனா். மானின் உடலில் சிறு காயங்கள் இருந்ததால் வனத் துறையினா் கால்நடை மருந்தகத்துக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். பின்னா், வண்டலூா் உயிரியல் பூங்காவில் புள்ளி மான் ஒப்படைக்கப்பட உள்ளதாக வனவா் மோகன்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT