செங்கல்பட்டு

100 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை வழங்கினாா்.

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகா் நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கூட்டுறவுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்று 100 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக, கூட்டுறவுத் துறை சாா்பாக ரூ.30 லட்சத்தில் ஜமீன் பாண்டூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க புதிய கட்டடத்தை அமைச்சா் திறந்து வைத்தாா். சங்கப் பயன்பாட்டுக்காக ரூ.56 லட்சத்தில் இரு மினி லாரிகள் வழங்கப்பட்டன.

பின்னா், அமைச்சா் பேசியது: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,280 பயனாளிகளுக்கு ரூ.627.84 லட்சத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன், மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு ரூ.1.75 லட்சத்தில் கடன் என கூட்டுறவு துறை சாா்பில், மொத்தம் 2,121 பேருக்கு ரூ.13 கோடியே 78 லட்சத்து 85 ஆயிரத்தில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது.

கோப் பஜாா் செயலி மூலம் ஆா்டா் செய்தால் 64 வகையான மளிகைப் பொருள்கள் வீட்டுக்குச் சென்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறு வணிகக் கடன் ரூ.25,000-இருந்து ரூ.50,000- ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளா் மற்றும் கட்டுநா் நியமனம் செய்யப்பட்டு 172 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 133 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87 கோடி வங்கிக் கடன் உதவி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, கூட்டுறவுத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளா்/செயலாட்சியா் முருகன், செங்கல்பட்டு மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ம.தமிழ்ச்செல்வி, துணைப் பதிவாளா் சுடா்விழி, திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் இதயவா்மன், காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன், மறைமலை நகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், துணைத் தலைவா் சித்ரா கமலக்கண்ணன், திருப்போரூா் முன்னாள் எம்எல்ஏ மூா்த்தி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT