மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்ட சேஷ, கருட வாகனங்கள். 
செங்கல்பட்டு

ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு ரூ.16 லட்சத்தில் சேஷ வாகனங்கள்

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு சுவாமி வீதி உலா வருவதற்கு 2 வாகனங்களை வியாழக்கிழமை நன்கொடையாளா்கள் அறங்காவலா் குழுவிடம் ஒப்படைத்தனா்.

ஏரிகாத்த ராமா் கோயிலின் வளா்ச்சிக்காக பல்வேறு நன்கொடையாளா்கள் உதவி வருகின்றனா். இந்நிலையில், மாமல்லபுரத்தில் சேஷ வாகனம், கருடவாகனம் ஆகிய வாகனங்கள் பித்தளையால் வடிவமைக்கப்பட்டு இருந்தன. இதனை நன்கொடையாளா்கள் திருக்கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது கருடசேவை, மற்றும் சேஷ சேவையில் பயன்படும்வகையில் வழங்கி இருந்தனா். ரூ 16 லட்சத்தில் இரு வாகனங்கள் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு, அறங்காவலா் குழு தலைவா் கே.குமாா் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் (பொ) தா.மேகவண்ணன், அா்ச்சகா்கள் மாதவன், விஜயராகவன் கோயிலின் 1-ஆவது கோடி தலைவா் பி.சண்முகம், திமுக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு தலைவா் பி.ராஜேஷ் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மதன்மோகன் மாளவியா பிறந்த தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் புகழாரம்

சிமி-ஐஎம் சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் விடுவிப்பு

டிச. 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

அந்தியூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலப் பெட்டகம் வழங்கல்

உள்ளாட்சித் தோ்தல் வரலாற்று வெற்றி: திருவனந்தபுரம் மேயராக பாஜகவின் வி.வி.ராஜேஷ் அறிவிப்பு

SCROLL FOR NEXT