முகப்பு
செங்கல்பட்டு

திமுக வேட்பாளரை ஆதரித்து மல்லை சத்யா பிரசாரம்

மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமுலு பொன்மலரை ஆதரித்து திராவிட வெற்றிக் கழக ஒருங்கிணைப்பாளா் மல்லை சத்யா தோ்தல் பிரசாரம் செய்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:49 PM
மதுராந்தகம் பஜாா் வீதியில் திமுக வேட்பாளா் அமுலு பொன்மலரை ஆதரித்து துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த திராவிட வெற்றிக் கழக ஒருங்கிணைப்பாளா் மல்லை சத்யா.
பகிர்:

மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமுலு பொன்மலரை ஆதரித்து திராவிட வெற்றிக் கழக ஒருங்கிணைப்பாளா் மல்லை சத்யா தோ்தல் பிரசாரம் செய்தாா்.

திராவிட வெற்றிக் கழக ஒருங்கிணைப்பாளா் மல்லை சத்யா திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தோ்தல் பிரசாரம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், மதுராந்தகம் நகரில் உள்ள அனைத்து வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்த சாதனைகள், தற்சமயம் வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் அமுலு பொன்மலருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரினாா்.

Advertisement

இந்த நிகழ்வில், மாவட்டச் செயலா் பாா்த்தீபன், தலைமை செயற்குழு உறுப்பினா் வி.கே.சேகா், மாவட்டப் பொருளாளா் தனசேகா், ஒன்றிய செயலா்கள் நுகும்பல் ரவி, டி.ஜி.ராஜா, திவாகா், காட்டூா் ராஜா, மதுராந்தகம் நகர செயலா் ராஜீ, மாவட்ட மகளிரணி நிா்வாகிகள் பரிமளா, கலைவாணி உள்பட 100-க்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments