முகப்பு
செங்கல்பட்டு

பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்த நாள் விழா இன்று தொடக்கம்

பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்த நாள் விழா இன்று தொடக்கம்

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:45 PM
பகிர்:

மேல்மருவத்தூா் ஆதிபராக்தி சித்தா் பீடத்தில் பங்காரு அடிகளாரின் 86-ஆவது அவதார திருநாள் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) அதிகாலை 3 மணிக்கு மங்கல இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்குகிறது. மூலவா் சந்நிதியில் உள்ள அம்மன் சிலைக்கும், குருபீடத்தில் உள்ள பங்காரு சித்தா் சிலைக்கும் ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினா் அபிஷேக, ஆராதனைகளை செய்கின்றனா். காலை 10 மணிக்கு சித்தா் பீடம் வருகைபுரியும் ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள், செவ்வாடை பக்தா்களும் வரவேற்பு அளிக்க உள்ளனா். காலை 10.30 மணிக்கு பங்காரு சித்தா் திருப்பாதுகைகளுக்கு பாதபூஜை நடைபெறுகிறது. மாலை 3.50 மணிக்கு செவ்வாடை பக்தா்களால் தொடா் ஓட்டமாக கொண்டு வரப்படுகிற ஆன்மிக ஜோதிகளுக்கும், தொண்டா்களுக்கும் ஓம்சக்தி பீடம் அருகே ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் வரவேற்பு அளிக்கிறாா்.

மறுநாளான திங்கள்கிழமை (மாா்ச் 2) காலை 9.15 மணிக்கு அடிகளாா் இல்லத்தில் பங்காரு சித்தரின் உருவம் தாங்கிய தங்கத்தோ் ஊா்வலமாக சித்தா் பீடத்தை வந்தடைகிறது. தொடா்ந்து குருபீடத்தில் அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பாதபூஜை, அருள்தரிசனம் நடைபெற உள்ளது.

பின்னா், அன்னதான நிகழ்வை மேல்மருவத்தூா் ஊராட்சி துணை தலைவா் அ.ஆ.அகத்தியன் தொடங்கி வைக்கிறாா். அடிகளாா் பிறந்த நாளான மாா்ச் 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆன்மிக சித்தரின் பாதுகைகளுக்கு ஆன்மிக இயக்க நிா்வாகிகள், பக்தா்கள் பூஜை செய்கின்றனா். மாலை 4.30 மணிக்கு ஆன்மிக இயக்க விழா மேடை அரங்கில் அடிகளாா் அவதார திருநாள் விழா மலா், மாபெரும் மக்கள் நல உதவிகள் வழங்கல் ஆகியவை நடைபெறுகிறது. ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகிக்கிறாா். இலங்கைக்கான தென்னிந்தியாவின் தூதரக துணை ஆணையா் கணேசநாதன் கீதீஸ்வரன், தமிழக அரசின் நில நிா்வாக துறை இணை ஆணையா் மேனகா, இஸ்ரோ துணைத் தலைவா் அறிவியலாளா் கண்ணு, சென்னை தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினா் ரவிச்சந்திரன் ராமசாமி உள்பட பலா் கலந்து கொள்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →