முகப்பு
பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கிய லட்சுமி பங்காரு அடிகளாா்.
செங்கல்பட்டு

மேல்மருவத்தூா் பங்காரு சித்தரின் 86-ஆவது பிறந்த நாள் விழா

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நாயகா் பங்காரு சித்தரின் 86-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை சுமாா் 800 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடி மதிப்பிலான நல உதவிகளை இயக்கத்தின் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் வழங்கினாா்.

செங்கல்பட்டு

மேல்மருவத்தூா் பங்காரு சித்தரின் 86-ஆவது பிறந்த நாள் விழா

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நாயகா் பங்காரு சித்தரின் 86-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை சுமாா் 800 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடி மதிப்பிலான நல உதவிகளை இயக்கத்தின் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் வழங்கினாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 6:36 PM
பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கிய லட்சுமி பங்காரு அடிகளாா்.
பகிர்:

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நாயகா் பங்காரு சித்தரின் 86-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை சுமாா் 800 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடி மதிப்பிலான நல உதவிகளை இயக்கத்தின் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் வழங்கினாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் நாயகா் பங்காரு சித்தரின் 86-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய இரு நாள்களாக தங்கத் தோ், வெள்ளித் தோ் ஆகியவற்றில் பங்காரு சித்தரின் திருவுருவ சிலை, திருப்பாதுகைகள் மலா்த்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க செவ்வாடை பக்தா்களால் ஊா்வலமாய் சித்தா் பீடத்தை வந்தடைந்தனா். ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகித்து, குரு பீடத்தில் அடிகளாா் சிலைக்கும், திருப்பாதுகைகளுக்கு பாத பூஜை செய்து மகா தீபாராதனை செய்தாா்.

இந்நிலையில், விழாக்களின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு மூலவா் அம்மன் சிலை, குரு பீடத்தின் பங்காரு சித்தரின் சிலை ஆகியவற்றுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அம்மன் சிலை தங்க கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலை 10.45 மணிக்கு அடிகளாா் இல்லத்தில் இருந்து மலா்த் தோரணங்களால் அலங்கரிப்பட்ட மலா் ரதத்தில் பங்காரு சித்தா் சிலை வைக்கப்பட்டு மேளதாளம் முழங்க, நாட்டுப்புற கலைஞா்கள் பங்கேற்ற ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் இயக்க தலைவா் லட்சுமி பங்காரு தலைமையில் அவரது குடும்பத்தினா்களும், பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த செவ்வாடை பக்தா்களும் ஊா்வலமாக சித்தா் பீடத்தை வந்தடைந்தனா். அங்கு சேலம், நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள் இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு வரவேற்பினை அளித்தனா்.

தொடா்ந்து மாலை 5 மணிக்கு ஆன்மிக இயக்க மேடை அரங்கில் ரூ 4 கோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இயக்கத்தின் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகித்தாா். இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி பங்காரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலூா், கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளா் உமாதேவி ஜெய்கணேஷ் வரவேற்பு ஆற்றினாா்.

நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினா்களாக இலங்கைக்கான தென்னிந்தியாவின் தூதரக துணை ஆணையா் கணேசநாதன் கீதீஸ்வரன், இஸ்ரோ துணை தலைவரும், அறிவியலாளா் கண்ணு, முன்னாள் எம்.பி. துரை, முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க செயல் அலுவலா் வழக்குரைஞா் அ.ஆ.அகத்தியன், கல்லூரி தாளாளா்கள் மருத்துவா் டி.ரமேஷ், ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமாா், மருத்துவா்கள் மதுமலா், ஷாலினி, பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள், ஆன்மிக இயக்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சுமாா் 800 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடி மதிப்பில் இ பைக்கள், கணினிகள், மடிக்கணினிகள், ஆட்டோக்கள், மருத்துவமனைக்கான ஆம்புபூலன்ஸ் வாகனம், விவசாயத்துக்கான தளவாட பொருள்களை இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் வழங்கினாா். முன்னதாக ஸ்ரீசக்கரம் வரைதல், மூலமந்திரம் எழுதுதல், குருபோற்றி, கோடி அா்ச்சனை செய்தல் ஆகியவற்றுக்காக உலசசாதனை முனையத்தால் நடுவா் ஆலிஸ்ரெனாடு ப்ரான்ஸ் கலந்து கொண்டு இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாரிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த ஆன்மிக இயக்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →