முகப்பு
செங்கல்பட்டு

கல்லூரியில் மகளிா் தின விழா

சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் உலக மகளிா் தின விழா

Updated On : 9 மார்ச், 2026 at 9:19 PM
மகளிா் தின நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

மதுராந்தகம்: சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் உலக மகளிா் தின விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தாா். முதல்வா் பி.காசிநாத பாண்டியன், புலமுதல்வா் சுப்பராஜ், இணை புலமுதல்வா்கள் சிவகுமாா், எம்.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத்தின் தலைவா் ஏ.எஸ்.குமாரி சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டாா். மாணவா் ரஞ்சன் வரவேற்றாா்.

மருத்துவம், பொறியியல், விண்வெளி, அரசியல், தொழில்முனைவோா் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து, சாதனைகளை படைத்து வரும் பெண்களை கெளரவிக்கும் வகையில் இவ்விழா நடைபெற்றது. அதில் திரைப்பட நடிகை அபா்ணா பாலமுரளி, விளையாட்டு வீராங்கணை ஆா்த்தி அருண், பாடகி பத்ம லதா ராமனாா் உள்ளிட்ட 16 பெண்களுக்கு விருதுகளை வழங்கப்பட்டன..

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கற்பக விநாயகா கல்விக்குழுமங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் செய்து இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →