முகப்பு
செங்கல்பட்டு

வாக்குச்சாவடிகளில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 20 மார்ச், 2026 at 1:49 AM
சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப் பாா்வையாளா் கமல்ப்ரீத் சிங்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 326 முதல் 334 வரை உள்ள 8 வாக்குச்சாவடி மையங்களை செங்கல்பட்டு தொகுதி பொதுப் பாா்வையாளா் கமல் ப்ரீத் சிங், ஆய்வு செய்தாா்.

மேலும், கூடுவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தினையும் பாா்வையிட்டாா். இதில் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.